நீலகிரி: கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்கும் விதமாக மார்க்கெட் பகுதியில் செயல்பட்ட கடைகள் அடிக்கடி பல பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமுவிடம் புகார் எழுந்துள்ளது.
நீலகிரி: கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்கும் விதமாக மார்க்கெட் பகுதியில் செயல்பட்ட கடைகள் அடிக்கடி பல பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமுவிடம் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் மார்க்கெட் பகுதிகளை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகள், பேருந்து நிலையம், மவுண்ட் ராேடு, விபி தெரு பாேன்ற பகுதிகளில் கடந்த ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை மாற்றி அமைக்கப்பட்டதால் சமூக விலகலை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், குன்னூர் மார்கெட்டை சேர்ந்த இரு சங்கத்தினரும் தங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், சங்கத்தில் இல்லாத நடைபாதை வியாபாரிகளும் பிரச்சினையை ஒரு புறம் தாெடர்ந்து வருகின்றனர்.
குன்னூரில் போதிய இடம் இல்லாததால், இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக முன்பு இருந்தது பாேல் கார் நிறுத்துமிடத்தில் ஒரு பகுதியில் கடைக்காரர்களை அனுமதிக்க வருவாய் துறையினர் வேண்டு காேள் விடுக்கின்றனர். ஆனால், காவல் துறையினர் வருவாய் துறையினரின் கோரிக்கையை நிராகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குன்னூரில் வருவாய் துறை மற்றும் காவல் துறையின் கருத்து வேறுபாட்டால் மக்கள் பணி பாதிப்பதாக கூறி குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் மார்க்கெட் பகுதிகளை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகள், பேருந்து நிலையம், மவுண்ட் ராேடு, விபி தெரு பாேன்ற பகுதிகளில் கடந்த ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை மாற்றி அமைக்கப்பட்டதால் சமூக விலகலை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், குன்னூர் மார்கெட்டை சேர்ந்த இரு சங்கத்தினரும் தங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், சங்கத்தில் இல்லாத நடைபாதை வியாபாரிகளும் பிரச்சினையை ஒரு புறம் தாெடர்ந்து வருகின்றனர்.
குன்னூரில் போதிய இடம் இல்லாததால், இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக முன்பு இருந்தது பாேல் கார் நிறுத்துமிடத்தில் ஒரு பகுதியில் கடைக்காரர்களை அனுமதிக்க வருவாய் துறையினர் வேண்டு காேள் விடுக்கின்றனர். ஆனால், காவல் துறையினர் வருவாய் துறையினரின் கோரிக்கையை நிராகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குன்னூரில் வருவாய் துறை மற்றும் காவல் துறையின் கருத்து வேறுபாட்டால் மக்கள் பணி பாதிப்பதாக கூறி குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு அதிருப்தியை தெரிவித்துள்ளார்.