கோவை: கோவையில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையமாக கோவை கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருக்கு கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையமாக கோவை கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருக்கு கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்டத்தில், பள்ளபாளையம் பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை கொரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அக்கடிதத்தில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட இந்த கல்லூரியில் 250 ஹாஸ்டல் அறைகளுடன் 800 கட்டில்களுடன் உள்ளதாகவும்,15,000 சதுர அடி கொண்ட ஆடிட்டோரியம், அதே அளவு கொண்ட சமையல் கூடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இதனை கொரோனா நோயாளிக்கு சிகிச்சைக்கான தனிமைப்படுத்தும் மையங்களாக தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்டத்தில், பள்ளபாளையம் பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை கொரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அக்கடிதத்தில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட இந்த கல்லூரியில் 250 ஹாஸ்டல் அறைகளுடன் 800 கட்டில்களுடன் உள்ளதாகவும்,15,000 சதுர அடி கொண்ட ஆடிட்டோரியம், அதே அளவு கொண்ட சமையல் கூடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இதனை கொரோனா நோயாளிக்கு சிகிச்சைக்கான தனிமைப்படுத்தும் மையங்களாக தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.