கொரோனா நிவாரணப்பொருட்களை பெறுவதற்கான டோக்கன்கள் பெற கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டம் ; சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுகோள்

கோவை: தமிழக அரசின் கொரோனா நிவாரணப்பொருள்களை நியாய விலைக்கடைகளின் மூலம் பெறுவதற்கான டோக்கன்கள் தருவதாக வந்த தகவலையடுத்து கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது.

கோவை: தமிழக அரசின் கொரோனா நிவாரணப்பொருள்களை நியாய விலைக்கடைகளின் மூலம் பெறுவதற்கான டோக்கன்கள் தருவதாக வந்த தகவலையடுத்து கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஊரடங்கு மற்றும் சமூக விலகல் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க கூடிய நிலையில் அதனை பல்வேறு இடங்களில் தகர்ந்துவருகின்றனர் மக்கள். அதே போன்ற நிலை தான் இன்று கோவையிலும் அரங்கேறியது.

கொரோனா நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து இதற்கான டோக்கன்கள் கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் இன்று அதிமுகவினர் ரேசன் அட்டை வைத்திருக்கும் பயனாளிகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். 



இதனைத்தொடர்ந்து இதனைத் தொடர்ந்து ரத்தினபுரி பள்ளியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று பள்ளி முன்பாக குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.



கொரோனாவிற்கு சமூக விலகல் முக்கியமான நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் மக்கள் ஒரே இடத்தில் கூடியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதுக்குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், ரேசன் அட்டை வைத்துள்ள 100 பேருக்கு மட்டுமே தினமும் டோக்கன் வழங்கப்படும் என தெரிவித்தனர். அனைத்தும் பயனாளிக்கும் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினர்.

சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து கொரோனாவினை தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ள நிலையில் இது போன்ற அலட்சியமான விஷயங்களை மேற்கொள்ள கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...