கோவை: கோவையில் 144 தடையை மீறி தொழுகையை ஒருங்கிணைத்ததாக மசூதிகளின் தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் 144 தடையை மீறி தொழுகையை ஒருங்கிணைத்ததாக மசூதிகளின் தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மத்திய மாநில அரசுகள் 144 தடை விதித்து பொதுமக்கள் ஒன்று கூடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதை தொடர்ந்து அனாவசியமாக சாலைகளில் பயணிப்பவர்கள் ஒன்றுகூடுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது வாகனங்களில் வீதிகளில் வலம் வரக்கூடாது பொதுமக்கள் வீட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கோவை உக்கடம் காவல் எல்லைக்குட்பட்ட இரண்டு பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து தகவலறிந்த உக்கடம் போலீசார் தொழுகைக்கு ஏற்பாடு செய்த பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதிய நேரத்தில் தொழுகை மேற்கொண்டதாக கோவை உக்கடம் அருகே உள்ள பெரிய பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழும், மீண்டும் மாலைநேரத்தில் ஒன்று கூடியதாக மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல உக்கடம் காவல் எல்லைக்குட்பட்ட சின்ன பள்ளிவாசலின் தலைவர் மற்றும் செயலாளர் மீதும் 4 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.