கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 5000 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 5000 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்றுதாகவும் அதில் 5000 தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.

கொரோனாவினை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. குறிப்பாக கோவை நகரினை பொறுத்தவரை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது பேசிய மாநகராட்சி ஆணையர், கோவை மாநகர் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தூய்மைப்பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் அர்ப்பணிப்புடன் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், நகர் முழுவதும் ஸ்பரேயர் மூலம் கிருமி நாசினி மருந்து தெளித்தல், துண்டு பிரசுரங்கள் வெளியிடுதல், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம், வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் இருமல் போன்றவற்றோடு யாரும் பாதிப்படைந்துள்ளரா என்பது பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாக ஆணையர் தெரிவித்தார்.

இதோடு 144 தடை உத்தரவினை பின்பற்றி மக்கள் வீட்டில் உள்ளே இருக்க வேண்டும், வெளியில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சளி, காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார். மேலும், கைகளை குறைந்தது 20 நிமிடம் கழுவி தூய்மையாக இருக்க வேண்டும், என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதோடு, அம்மா உணவகங்களில் 24 மணி நேரமும் உணவு தரமானதாகவும், தடையின்றி கிடைத்திட சம்பந்தப்பட்டவர்கள் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு சமுதாய சமையலறைகள் அமைத்து உணவு விநியோகம் செய்யப்பட்டுவருவதாக கூறினார். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகர பொறியாளர், நகர்நல அலுவலர், மண்டல உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...