நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்காததால் 144 தடை உத்தரவு காற்றில் பறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்காததால் 144 தடை உத்தரவு காற்றில் பறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பேருந்து நிலையம், சாந்தி விஜயா பள்ளி மைதானம் மற்றும் ஏடிசி மைதானம் என்ற மூன்று இடங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்து தந்த நிலையி்ல், குன்னூரில் பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு இடம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கூடும் நூற்றுக்கணக்கான பாெதுமக்கள் இடைவெளி விட்டு பாெருட்களை வாங்க இயலாத காரியமாக உள்ளது.

இதேபோல, ஆங்காங்கே அரசியல் பிரமுகர்களும் ஆய்வு செய்வதாக கூறி கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தனித்திருப்பதன் முக்கியத்துவத்தை இன்னும் முறையாக பின்பற்றாததால் காெராேனா வைரஸ் தாெற்று ஏற்படும் சூழல் நிலவுவதால், அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு வழங்க பல்வேறு வாகன ஓட்டிகள் முன் வரும் நிலையில், அவர்களை ஊக்குவித்து ஒவ்வொரு கிராம பகுதிகளுக்கும் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பேருந்து நிலையம், சாந்தி விஜயா பள்ளி மைதானம் மற்றும் ஏடிசி மைதானம் என்ற மூன்று இடங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்து தந்த நிலையி்ல், குன்னூரில் பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு இடம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கூடும் நூற்றுக்கணக்கான பாெதுமக்கள் இடைவெளி விட்டு பாெருட்களை வாங்க இயலாத காரியமாக உள்ளது.

இதேபோல, ஆங்காங்கே அரசியல் பிரமுகர்களும் ஆய்வு செய்வதாக கூறி கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தனித்திருப்பதன் முக்கியத்துவத்தை இன்னும் முறையாக பின்பற்றாததால் காெராேனா வைரஸ் தாெற்று ஏற்படும் சூழல் நிலவுவதால், அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு வழங்க பல்வேறு வாகன ஓட்டிகள் முன் வரும் நிலையில், அவர்களை ஊக்குவித்து ஒவ்வொரு கிராம பகுதிகளுக்கும் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.