கோவை: கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறி, இறைச்சி, மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இங்கு கூடும் மக்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையங்களில் தினசரி சந்தைகள் திறக்கப்பட்டு, மக்கள் போதிய இடைவெளியைப் பின்பற்றி காய்கறி வாங்கிச் செல்ல கடந்த சனிக்கிழமை முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், உக்கடம் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அதிக அளவில் கூடியது. மக்கள் அதிக அளவில் மீன் வாங்க குவிந்ததால் சந்தையில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதிமுறையும் மீறப்பட்டது.
கொரோனா நோய்த் தாக்கம் அதிகரித்து விடக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசின் உத்தரவை பின்பற்றாமல் மீன் சந்தையில் சமூக இடைவெளிவிட்டு நிற்காமல் மக்கள் கூட்டமாக நின்று மீன் வாங்கியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான மீன் சந்தையை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திறக்க அனுமதிக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறி, இறைச்சி, மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இங்கு கூடும் மக்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையங்களில் தினசரி சந்தைகள் திறக்கப்பட்டு, மக்கள் போதிய இடைவெளியைப் பின்பற்றி காய்கறி வாங்கிச் செல்ல கடந்த சனிக்கிழமை முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், உக்கடம் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அதிக அளவில் கூடியது. மக்கள் அதிக அளவில் மீன் வாங்க குவிந்ததால் சந்தையில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதிமுறையும் மீறப்பட்டது.
கொரோனா நோய்த் தாக்கம் அதிகரித்து விடக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசின் உத்தரவை பின்பற்றாமல் மீன் சந்தையில் சமூக இடைவெளிவிட்டு நிற்காமல் மக்கள் கூட்டமாக நின்று மீன் வாங்கியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான மீன் சந்தையை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திறக்க அனுமதிக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.