திருப்பூரில் தங்கியுள்ள மற்ற மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தங்கியுள்ள 22 மாநிலங்களைச் சேர்ந்த 41,273 தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சி எடுத்து வருவதாக திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தங்கியுள்ள 22 மாநிலங்களைச் சேர்ந்த 41,273 தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சி எடுத்து வருவதாக திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூரில் 41 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு அங்கு மருத்துவர் , சுகாதாரப்பணியாளர்கள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கேரள எல்லையில் முழு பரிசோதனை செய்தபின்பே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இதே போல், திருப்பூர் மாநகராட்சியில் 47 வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது எனவும் திருப்பூர் மாவட்டத்தில் 22 மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 41273 பேர் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராகி வருவதாக கூறினார். 

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு 200 முழு உடல் கவசம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் நேற்றைய தினம் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகமானதையடுத்து இன்னும் ஒருசில தினங்களில் இறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு கூட்டத்தை குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...