கோவை: கோவையில் மோடி கிச்சனை வீடியோ கான்பரன்சிங் மூலம் பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் மோடி கிச்சனை வீடியோ கான்பரன்சிங் மூலம் பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருந்துகள், பால் தவிர மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் இரண்டு வரை செயல்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வட மாநிலத்தில் இருந்து வந்து தங்கி உள்ளவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உணவு தடையின்றி கிடைக்கப் பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மோடி கிச்சன் துவங்கப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் கிராஸ் கட் பகுதியில் தலைவாசல் காம்பளக்ஸ் வளாகத்தில் மோடி கிச்சனை பா.ஜ.க.மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு உணவுகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் வாகனங்களில் கொண்டு சென்று உணவு இல்லாதவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருந்துகள், பால் தவிர மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் இரண்டு வரை செயல்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வட மாநிலத்தில் இருந்து வந்து தங்கி உள்ளவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உணவு தடையின்றி கிடைக்கப் பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மோடி கிச்சன் துவங்கப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் கிராஸ் கட் பகுதியில் தலைவாசல் காம்பளக்ஸ் வளாகத்தில் மோடி கிச்சனை பா.ஜ.க.மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு உணவுகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் வாகனங்களில் கொண்டு சென்று உணவு இல்லாதவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.