கோவை போலீசாரின் மனிதநேயம்..! ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகை திருத்தி, உணவு கொடுத்து ஆசிரமத்தில் சேர்ப்பு

கோவை: 144 தடை உத்தரவால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நிலையில் ஆதரவற்ற நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டவர் சுற்றித்திரிந்ததை கண்ட போலீசார் மனிதநேயத்துடன் அவருக்கு சிகை திருத்தி புத்தாடை அணிவித்து உணவு கொடுத்து ஆசிரமத்தில் சேர்த்த நிகழ்வுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


கோவை: 144 தடை உத்தரவால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நிலையில் ஆதரவற்ற நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டவர் சுற்றித்திரிந்ததை கண்ட போலீசார் மனிதநேயத்துடன் அவருக்கு சிகை திருத்தி புத்தாடை அணிவித்து உணவு கொடுத்து ஆசிரமத்தில் சேர்த்த நிகழ்வுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நிலையில் சாலையின் ஓரங்களில் உறங்கும் ஆதரவற்றவர்கள் உணவு இன்றி கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். 

மேலும், நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு இல்லாமல் பீதியில் உறைந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் சாலையில் உறங்கும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு முதியவரை போலிஸார் மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த முதியவருக்கு முடி திருத்தி, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, உணவு வழங்கியதுடன் அவரை தற்காலிக விடுதியில் தங்க வைத்துள்ளனர். 

இந்த போலீஸாரின் மனிதநேய பணிகள் குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...