கோவையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு உருவபொம்மையை உருவாக்கிய தங்கநகை தொழிலாளி!

கோவை: கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள தியானித்திரு தனித்திரு என்ற வாசகம் அடங்கிய பூட்டின் மேல் தியானம் செய்வது போல மெழுகால் ஆன உருவ பொம்மையை தங்க நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா வடிவமைத்து உள்ளார்.

கோவை: கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள தியானித்திரு தனித்திரு என்ற வாசகம் அடங்கிய பூட்டின் மேல் தியானம் செய்வது போல மெழுகால் ஆன உருவ பொம்மையை தங்க நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா வடிவமைத்து உள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது சிறிய வடிவிலான பல்வேறு பொருட்களை உருவாக்கி வருகிறார். சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பொருட்களை உருவாக்கி உள்ளார்.

இந்த நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள தியானித்திரு தனித்திரு என்ற வாசகம் அடங்கிய பூட்டின் மேல் தியானம் செய்வது போல மெழுகால் ஆன உருவ பொம்மையை வடிவமைத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தாக்கத்தை முழுமையாக மக்கள் அறிந்து கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அரசிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தனியாக இருந்து தியானங்களை மக்கள் மேற்கொள்வதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் இதனை வலியுறுத்தி இந்த மெழுகு பொம்மையை செய்துள்ளத்காக தெரிவித்தார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...