வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றியவர்களுக்கு கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்!

கோவை: வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல் ஆய்வாளர் கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.

கோவை: வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல் ஆய்வாளர் கொரானா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார். 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பு நடவடிக்கையின் படி 144 மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை மற்றும் மருந்து பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 



இதனை பயன்படுத்தி ஒரு சிலர் அடிக்கடி நடந்தும் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வால்பாறை நகரில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் தபால் நிலையம், பழைய பேருந்து நிலையம், ஸ்டான்மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் ரோந்து பணியினை மேற்கொண்டனர். 



அப்போது, சாலைகளில் சென்றவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அடிக்கடி சாலைகளில் நடமாடியவர்களை காந்தி சிலை வளாகத்திற்கு வரவழைத்து சமூக விலக்கு கோட்டில் நிற்க வைத்து கொரானா பரவல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், தேவையில்லாமல் சாலைகளில் நடமாட மாட்டோம் என்று உறுதி மொழி எடுக்க வைத்தார். அதே ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கி வைத்து கொள்ள வேண்டும் எனவும் அடிக்கடி கடைகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் கொரோனா வராமல் பாதுகாத்திட வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் வலியுறுத்தினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...