வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 4484 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 4484 பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை: வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 4484 பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி உட்பட கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அம்மா உணவகங்களில் 3 நேரமும் உணவகங்கள் செயல்படும் என்று தெரிவித்தார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனையாக செயல்படுகின்றது எனவும் இதுவரை 147 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றவர், வெளிநாடுகளில் இருந்து வந்த 4484 பேர் அவர்களின் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் உள்ள 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து 5 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதிமுக சார்பில் 25 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள், மருத்துகள் இன்று கோவை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அத்தியாவசிய பொருட்கள் கேரளா உட்பட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது என்றார். 

தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த இரட்டை ஊதியம் ஓப்பந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்த அவர், இது போன்ற செயல்பாடுகளில் நிரந்தர பணியாளர், ஒப்பந்த பணியாளர் என வேறுபடுத்தி இந்த அரசு பார்க்காது என்று கூறினார்.

மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை தடுத்து அங்குள்ள முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைப்பதில் இனி தட்டுப்பாடு இருக்காது எனவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து ஆலோசித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதேபோல, வடமாநிலத்தவருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடமாநில தொழிலாளர்களின் பிரச்சினையை மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...