திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 7 வெண்டிலேட்டர் உட்பட 86 வென்டிலேட்டர்கள் மாவட்டத்தில் தயார் நிலையில் இருப்பதாக அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 7 வெண்டிலேட்டர் உட்பட 86 வென்டிலேட்டர்கள் மாவட்டத்தில் தயார் நிலையில் இருப்பதாக அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோணா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பணிகள் திருப்பூரில் திறம்பட செய்து வருவதாகவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் சிகிச்சைக்கான மையம் தயார் நிலையில் இருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழு வெண்டிலேட்டர்களும் மாவட்டத்தின் தனியார் மருத்துவமனைகளில் 79 வெண்டிலட்டர் என 86 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தின் அவிநாசி, உடுமலை உள்ளிட்ட அனைத்து தாலுகாவிலும் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட இருப்பதாகவும், திருப்பூரில் 6 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் லண்டனில் இருந்து திரும்பிய ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரும் தற்போது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கொரோணா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பணிகள் திருப்பூரில் திறம்பட செய்து வருவதாகவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் சிகிச்சைக்கான மையம் தயார் நிலையில் இருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழு வெண்டிலேட்டர்களும் மாவட்டத்தின் தனியார் மருத்துவமனைகளில் 79 வெண்டிலட்டர் என 86 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தின் அவிநாசி, உடுமலை உள்ளிட்ட அனைத்து தாலுகாவிலும் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட இருப்பதாகவும், திருப்பூரில் 6 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் லண்டனில் இருந்து திரும்பிய ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரும் தற்போது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.