கோவை: கோவையில் பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பாக கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரத்யேக வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பாக கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரத்யேக வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களுக்கும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க 200 படுக்கைகள் கொண்ட பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 20 படுக்கைகள் சிக்கலான வழக்குகளை கவனித்துக்கொள்ளவும், வென்டிலேட்டர் வசதிகளுடன் 10 படுக்கைகள் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கொரொனா நோயால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக தனி ஆபரேஷன் தியேட்டரும் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய டாக்டர் சுதா ராமலிங்கம், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதற்காக கொரோனா வைரஸ் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யும் வசதி தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான ஒப்புதல் கிடைத்ததும் கொரோனா பரிசோதனை கூட மருத்துவமனையில் செய்யப்படும் என தெரிவித்தார்.