கோவை: கோவை டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்கறி மார்க்கெட் ஆகியவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தையாக மாற்றப்பட்டுள்ளது.
கோவை: கோவை டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்கறி மார்க்கெட் ஆகியவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தையாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையான பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று வீரியம் மிகவும் அதிகம் என்பதால் தமிழகத்தில் கடுமையாக ஊரடங்கை பின்பற்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், உழவர் சந்தைகள் காலை 4.30 மணி முதல் 9 மணி மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, குறுகிய இடங்களில் சந்தைகள் அமைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்கறி மார்க்கெட் ஆகியவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், பொதுமக்கள் நெருக்கத்தை தடுக்க 1 மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் போடப்பட்டுள்ளது. காலை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

இதே போல், அண்ணா மார்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி மார்கெட் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் அங்கிருந்து காய்கறிகள் பெற்றுச் செல்கின்றனர்.
கோவை காய்கறி சந்தைக்கு முதலமைச்சர் பாராட்டு:-

கோயம்புத்தூர் காய்கறி சந்தையில் பொறுமையுடனும், பொறுப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் நடந்து கொண்டது பாராட்டிற்குரியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்குத் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையான பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று வீரியம் மிகவும் அதிகம் என்பதால் தமிழகத்தில் கடுமையாக ஊரடங்கை பின்பற்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், உழவர் சந்தைகள் காலை 4.30 மணி முதல் 9 மணி மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, குறுகிய இடங்களில் சந்தைகள் அமைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்கறி மார்க்கெட் ஆகியவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், பொதுமக்கள் நெருக்கத்தை தடுக்க 1 மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் போடப்பட்டுள்ளது. காலை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

இதே போல், அண்ணா மார்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி மார்கெட் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் அங்கிருந்து காய்கறிகள் பெற்றுச் செல்கின்றனர்.
கோவை காய்கறி சந்தைக்கு முதலமைச்சர் பாராட்டு:-

கோயம்புத்தூர் காய்கறி சந்தையில் பொறுமையுடனும், பொறுப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் நடந்து கொண்டது பாராட்டிற்குரியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்குத் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
