கோவை ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் காவல் எல்லை பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்!

கோவை: கோவை ராமநாதபுரம் காவல் நிலையம், போத்தனூர் காவல் நிலையம் உட்பட கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

கோவை: கோவை ராமநாதபுரம் காவல் நிலையம், போத்தனூர் காவல் நிலையம் உட்பட கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவை மாநகரத்தில் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.



இந்த நிலையில், கோவை டி-1 ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஒலிம்பஸ், புலியகுளம், அம்மன்குளம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போலீசார் ஊர் பகுதிக்குள் சென்று பொதுமக்கள் தனித்து வாழவும், கைகளைக் கழுவி தூய்மையாக இருந்து சமூக பரவலை கட்டுப்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொண்டனர்.

அதேபோல, போத்தனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட சுந்தராபுரம், வெள்ளலூர், குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம், போன்ற இடங்களிலும் போலீசார் விழிப்புணர்வு மற்றும் உணவு வழங்கல் பணிகளில் ஈடுபட்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...