கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மருத்துவமனையில் இருந்து தப்பித்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மருத்துவமனையில் இருந்து தப்பித்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் கொரோனா அறிகுறியுடன் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் மாயமானார்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சுற்றுவட்டாரம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையிலான போலீசார் சுற்றுவட்டாரம் முழுவதும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், வசந்தா மில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அந்தப்பெண் மறைந்து இருந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அவரை பிடித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர்.