கொரானா தடுப்பு நடவடிக்கை: வால்பாறை நகராட்சியில் தன்னார்வலர்கள் குழு அமைப்பு!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பு முன்னெரிக்கை நடவடிக்கையில் நகராட்சிக்கு உதவிட தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பு முன்னெரிக்கை நடவடிக்கையில் நகராட்சிக்கு உதவிட தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை கால்பந்து குழுவினர் 20 பேர் வால்பாறை நகராட்சி ஆணையர் பவன்ராஜை சந்தித்து தற்போது நடைபெற்று வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு தாங்கள் கலந்து கொண்டு உதவிட விரும்புவதாக கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் அவர்கள், செயல்படும் விதம் தேயிலை தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களிடம் கொரானா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அந்தந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், யாரும் கொரானா அறிகுறிகளுடன் உள்ளனரா என்று கண்டறிந்து தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் தன்னார்வலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.



மேலும், அவர்களுக்கு முக கவசம் மற்றும் பாதுகாப்பு கையுறை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆணையாளர் பவன்ராஜ் அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்டார். அங்குள்ள பணியாளர்களிடம் அம்மா உணவகத்தில் உணவு வகைள் சுகாதாரமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன், மேற்பார்வையாளர் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...