திருப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் சென்றதாக 40 வழக்குகள் பதியப்பட்டு செய்யப்பட்டுள்ளதாகவும், 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் சென்றதாக 40 வழக்குகள் பதியப்பட்டு செய்யப்பட்டுள்ளதாகவும், 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் மாநகர காவல்துறை சார்பில் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 



அதன் ஒருபகுதியாக திருப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 வாகனங்களை மாநகர காவல்துறை ஆணையர் பத்ரிநாராயணன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சென்றதாக 40 வழக்குகள் பதியப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் திருப்பூர் ஊரகப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாநகர காவல் துறை சார்பில் 30 வாகனங்களின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த வாகனங்கள் பகுதி வாரியாக சென்று பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...