சென்னை: உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்த பின் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது எனவும் இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும் என்றும் மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்த பின் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது எனவும் இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும் என்றும் மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.