கோவை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
கோவை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மருத்துவ வசதிகளும் செய்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி சார்பில் தொடர்ச்சியாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளானது நடைபெற்றது.
கோவை மாநகரில் இந்த பணியானது அடுத்த 20 நாட்களுக்கு தொடர இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்படும் நபர்கள் வசித்த பகுதிகளில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ட்ரோன் 5 லிட்டர் எடையில் உள்ள கிருமிநாசினியைச் சுமந்தபடி 50 மீட்டர் உயரமும் 2 கிலோமீட்டர் தூரமும் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.