கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையால் பத்திரிகையாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையால் பத்திரிகையாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா எதிரொலி காரணமாக அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகள், அதிகளவு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கொரொனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என பல்வேறு இடங்களுக்கு செய்தி சேகரிக்க சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், நோய் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, வெப்ப ஊடுருவு கதிர் கருவி மூலம் உடல் நிலை வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாம் சுகாதாரத்துறையின் பயிற்சி மருத்துவ அதிகாரி ஜோ டேனியல், மருத்துவர் பானு சந்தர், செவிலியர்கள் புனிதா, வனராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா எதிரொலி காரணமாக அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகள், அதிகளவு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கொரொனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என பல்வேறு இடங்களுக்கு செய்தி சேகரிக்க சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், நோய் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, வெப்ப ஊடுருவு கதிர் கருவி மூலம் உடல் நிலை வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாம் சுகாதாரத்துறையின் பயிற்சி மருத்துவ அதிகாரி ஜோ டேனியல், மருத்துவர் பானு சந்தர், செவிலியர்கள் புனிதா, வனராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.