பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அரசு மருத்துவமனைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியருக்கு சண்முகசுந்தரம் எம்.பி கடிதம்

கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம்‌, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும்‌ தொண்டாமுத்தூர்‌ சட்டமன்ற தொகுதியில்‌ அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சண்முகசுந்தரம் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம்‌, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும்‌ தொண்டாமுத்தூர்‌ சட்டமன்ற தொகுதியில்‌ அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சண்முகசுந்தரம் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில்‌ அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரனா வைரஸ்‌ (கோவிட்‌ 19) பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள்‌ மற்றும்‌ மருந்துகள்‌ வாங்கிக்‌ கொள்வதற்கு தேவையான நிதியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்‌.50,00,000.00 (ஐம்பது லட்சம்‌) ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களுக்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.

மேலும், திருப்பூர்‌ மாவட்டத்தில்‌ அமைந்துள்ள மடத்துக்குளம்‌, உடுமலை பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும்‌ கோவை மாவட்டத்தில்‌ அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர்‌ மற்றும்‌ கிணத்துக்கடவு தொகுதிகளில்‌ கொரனா வைரஸ்‌ (கோவிட்‌ 19) பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனையில்‌ மருத்துவ உபகரணங்கள்‌ வழங்க உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென தெரிவித்தார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...