நீலகிரி: வெளிநாடுகளில் இருந்து கூடலூருக்கு வந்த இருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட போதும் அதனை மதிக்காமல் வெளியில் நடமாடியதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களது வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: வெளிநாடுகளில் இருந்து கூடலூருக்கு வந்த இருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட போதும் அதனை மதிக்காமல் வெளியில் நடமாடியதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களது வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் வீடுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவர்களை வீடுகளில் தனியாக இருக்கவும் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் தனிமையாக இருந்து நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மற்றும் ஊரக துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மன் வயல் சுற்றுவட்ட பகுதிகளில் துபாய் அபுதாபி பஹ்ரைன் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளவர்களின் கண்டறியப்பட்ட ஏழு வீடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வீடுகளில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தங்கியிருப்பதை அறிவிக்கும் வகையிலும் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதை அறிவிக்கும் வகையிலும் வீடுகளின் முன்பாக ஸ்டிக்கர்கள் ஒட்டியும், அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் எந்த நிலையில் உள்ளது என்பதை பரிசோதித்தும் மருத்துவத் துறையினர் குறிப்பிடும் காலம் வரையில் தொடர் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தியும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஊரக வாழ்வாதார துறை இயக்குனர் மற்றும் மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலருமான பாபு தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சுகாதாரத் துறையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அறுபத்துநான்கு நபர்கள் குறித்த கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் இதே முறையில் தனித்தனி குழுக்கள் அமைத்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து கூடலூருக்கு வந்த அஜித்குமார் மற்றும் விஜயபிரபா ஆகிய இருவரும் வீட்டில் தனிமைப்படுத்த போதும் அதனை மதிக்காமல் வெளியில் நடமாடியதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களது வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் வீடுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவர்களை வீடுகளில் தனியாக இருக்கவும் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் தனிமையாக இருந்து நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மற்றும் ஊரக துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மன் வயல் சுற்றுவட்ட பகுதிகளில் துபாய் அபுதாபி பஹ்ரைன் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளவர்களின் கண்டறியப்பட்ட ஏழு வீடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வீடுகளில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தங்கியிருப்பதை அறிவிக்கும் வகையிலும் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதை அறிவிக்கும் வகையிலும் வீடுகளின் முன்பாக ஸ்டிக்கர்கள் ஒட்டியும், அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் எந்த நிலையில் உள்ளது என்பதை பரிசோதித்தும் மருத்துவத் துறையினர் குறிப்பிடும் காலம் வரையில் தொடர் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தியும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஊரக வாழ்வாதார துறை இயக்குனர் மற்றும் மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலருமான பாபு தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சுகாதாரத் துறையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அறுபத்துநான்கு நபர்கள் குறித்த கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் இதே முறையில் தனித்தனி குழுக்கள் அமைத்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து கூடலூருக்கு வந்த அஜித்குமார் மற்றும் விஜயபிரபா ஆகிய இருவரும் வீட்டில் தனிமைப்படுத்த போதும் அதனை மதிக்காமல் வெளியில் நடமாடியதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களது வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.