கோவையில் ஊரடங்கு உத்தரவால் தங்குவதற்கு வழியின்றி தவித்த போலந்து பெண்; தனியார் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதி பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்!

கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தங்க வழியின்றி தவித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டு பெண்ணிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்ல அனுமதி பெற்று தந்தனர்.


கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தங்க வழியின்றி தவித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டு பெண்ணிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்ல அனுமதி பெற்று தந்தனர். 

போலந்து நாட்டை சேர்ந்த பெண் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் பயிற்சி வகுப்புகள் மேற்கொண்டு வந்த அவர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை சிங்காநல்லூர் பகுதியில் நின்று கொண்டு இருந்த அவரை சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வெளிநாட்டு பெண் பயணி கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈஷா யோகா மையம் மூடப்பட்ட நிலையில் நேற்று முதல் 144 தடை உத்தரவின் காரணமாக தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். சொந்த நாட்டிற்கும் செல்ல முடியாத நிலையில் தங்க வழியின்றி இருப்பதாக தெரிவித்தார். 

இதனையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்ல அனுமதி பெற்று தந்தனர். இதற்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிப்பதாக போலந்து பெண்மணி தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...