கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஹெலிகேம் மூலம் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஹெலிகேம் மூலம் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் தூய்மை பணியாளர்கள் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாநகராட்சி சார்பில் சாலைகளில் ஹெலிகேம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது.
இந்த பணிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.