கோவை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபையில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை இருக்கும் என சட்டசபையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
கோவை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபையில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை இருக்கும் என சட்டசபையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மாலை முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டன. சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
போலீசார் ரோந்து பணிகளில் மக்கள் உடனடியாக கலைந்து விரைவாக செல்லுமாறு மைக் மூலமாக தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் பேருந்துகள் இல்லாத காரணத்தாலும் வீட்டிற்கு செல்ல பேருந்துகள் கிடைக்காத்தால் ஏமாற்றற்றதுடன் நடந்தே சென்றனர்.