திருப்பூர்: திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியதால் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர்: திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியதால் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பாதிப்பு உலக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த பாதிப்பால் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காகவும், மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, தொழில் நகரமான திருப்பூரில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அரசின் 144 தடை உத்தரவையடுத்து, பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டதை அடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த பிற மாவட்ட தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர்களுக்கு செல்ல துவங்கினர். இதனால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பாதிப்பு உலக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த பாதிப்பால் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காகவும், மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, தொழில் நகரமான திருப்பூரில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அரசின் 144 தடை உத்தரவையடுத்து, பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டதை அடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த பிற மாவட்ட தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர்களுக்கு செல்ல துவங்கினர். இதனால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.