கோவையில் சிறு, குறுந்தொழில் கூடங்கள் மூடப்படுவதால் வங்கிக்கடன், வருமான வரி உள்ளிட்டவை கட்டுவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவையில் சிறு, குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட உள்ள நிலையில் வங்கிக்கடன், ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்டவை கட்டுவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென தொழில் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் சிறு, குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட உள்ள நிலையில் வங்கிக்கடன், ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்டவை கட்டுவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென தொழில் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இன்று மாலை முதல் 144 தடை அமலாக உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் கூடங்கள் 31ம் தேதி வரை மூடப்படுகின்றன. 



இதனிடையே கொடிசியா, டேக்ட், கோப்மா உள்ளிட்ட 13 தொழில் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், கோவையில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் 31 ம் தேதி மூடப்படுவதாகவும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜீன் மாதம் வரை தொழிற்கூடங்கள் மூடல் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தொழில் அமைப்பினர் தெரிவித்தனர். 



ஏற்கனவே பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்கள் நலிவடைந்துள்ள நிலையில் கொரோனா மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் வங்கிக்கடன், ஜிஎஸ்டி,வருமான வரி உள்ளிட்டவை கட்ட 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் இதேபோல மின் கட்டணம் செலுத்தவும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...