மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி; அகலப்படுத்தப்பட்ட சாலையில் சென்டர்மீடியன் வைக்காததால் தொடரும் விபத்துகள்!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் சாலை இரு வழிச்சாலையாக இருந்த நிலையில் அதனை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. 

அதன் பின்னர் சாலையின் நடுவே சென்டர் மீடியன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை வைக்கப்படவில்லை. இதனால் கடந்த இரு மாதங்களாக இந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு என்பது தொடர்கிறது. 

இந்த நிலையில், காரமடை குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் என்பவரது மனைவி திலகாமணி(38). இவர் இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டுக்கு மீண்டும் கோவை காரமடை சாலையில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, குட்டையூர் பகுதிக்கு அருகே வந்த போது மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின் பகுதியின் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த திலகாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார், அவரது உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், போலீசார் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் காளியப்பனூர் பகுதியை சேர்ந்த காளிசாமி என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...