நீலகிரி: கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், நீலகிரியில் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி வெளிமாநில நபர்களை தங்க வைத்திருந்த இரண்டு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது .
நீலகிரி: கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், நீலகிரியில் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி வெளிமாநில நபர்களை தங்க வைத்திருந்த இரண்டு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது .
நீலகிரி மாவட்டம் தமிழக எல்லை பகுதியாகவும் கேரளா கர்நாடகா மாநிலங்களை ஒட்டியும் அமைந்துள்ளது. கொரோனா பரவுவதலை தடுக்கும் விதமாக மாநில எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டு வெளிமாநில வாகனங்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் இப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் லாட்ஜ்கள் ஹோட்டல்களில் வெளி நபர்களை தங்க வைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் முறையாக செயல்படுகிறதா ? என்பதனை இன்று கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் நகராட்சி ஆணையர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர்.

அப்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்ட நபர்களை தங்கவைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அந்த தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் வரை இப்பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஹோட்டல்களில் வெளிமாநில நபர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், தங்களது சோதனை நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் தமிழக எல்லை பகுதியாகவும் கேரளா கர்நாடகா மாநிலங்களை ஒட்டியும் அமைந்துள்ளது. கொரோனா பரவுவதலை தடுக்கும் விதமாக மாநில எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டு வெளிமாநில வாகனங்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் இப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் லாட்ஜ்கள் ஹோட்டல்களில் வெளி நபர்களை தங்க வைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் முறையாக செயல்படுகிறதா ? என்பதனை இன்று கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் நகராட்சி ஆணையர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர்.

அப்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்ட நபர்களை தங்கவைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அந்த தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் வரை இப்பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஹோட்டல்களில் வெளிமாநில நபர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், தங்களது சோதனை நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.