கோவை: தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் அருகே கேரளாவிலிருந்து வந்த 400 தமிழக தொழிலாளர்கள் எல்லையில் நிறுத்தி வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் கோவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை: தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் அருகே கேரளாவிலிருந்து வந்த 400 தமிழக தொழிலாளர்கள் எல்லையில் நிறுத்தி வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் கோவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா அச்சத்தால் கேரளாவில் உள்ள தமிழக மக்கள் தொடர்ச்சியாக தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், இன்று கேரள மாநிலத்திலிருந்து கோவை வாளையாறு எல்லைக்குள் 400க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கடும் சோதனைகளுக்கு பின் எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல இந்த கூட்டத்தில் மகப்பேறு பரிசோதனைக்காக கோவை வந்த கேரளா கர்ப்பிணிப் பெண்ணும் மாட்டிக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழக கேரள எல்லையில் வரும் கேரள வாகனங்கள் மீண்டும் கேரளாவுக்குள் அனுப்ப காவல்துறையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.