கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலைய பகுதியில் தோட்டத்தினுள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலைய பகுதியில் தோட்டத்தினுள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறை நகரின் முக்கிய பகுதியாக உள்ளது புதிய பேருந்து நிலையம். இதனை ஒட்டியுள்ள பகுதியில் சின்னையன் என்பவர் காய்கறி தோட்டத்துடன் வாழை பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை சின்னையனின் தோட்டத்தினுள் புகுந்து அங்கிருந்த வாழை மரங்களை ஒடித்து சாப்பிட்டு சேதப்படுத்தியது.

தொடர்ந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்தியது. காட்டு யானை வந்ததை அறிந்த சின்னையன் வனத்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டினர். இதில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒற்றை காட்டு யானை வால்பாறை நகருக்குள் புகுந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும், அங்கிருந்து அகன்ற காட்டு யானை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் வால்பாறை நகருக்குள் வரலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகரின் முக்கிய பகுதியாக உள்ளது புதிய பேருந்து நிலையம். இதனை ஒட்டியுள்ள பகுதியில் சின்னையன் என்பவர் காய்கறி தோட்டத்துடன் வாழை பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை சின்னையனின் தோட்டத்தினுள் புகுந்து அங்கிருந்த வாழை மரங்களை ஒடித்து சாப்பிட்டு சேதப்படுத்தியது.

தொடர்ந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்தியது. காட்டு யானை வந்ததை அறிந்த சின்னையன் வனத்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டினர். இதில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒற்றை காட்டு யானை வால்பாறை நகருக்குள் புகுந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும், அங்கிருந்து அகன்ற காட்டு யானை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் வால்பாறை நகருக்குள் வரலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.