வால்பாறையில் வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை..!

கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலைய பகுதியில் தோட்டத்தினுள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலைய பகுதியில் தோட்டத்தினுள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரின் முக்கிய பகுதியாக உள்ளது புதிய பேருந்து நிலையம். இதனை ஒட்டியுள்ள பகுதியில் சின்னையன் என்பவர் காய்கறி தோட்டத்துடன் வாழை பயிரிட்டுள்ளார்.



இந்நிலையில் நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை சின்னையனின் தோட்டத்தினுள் புகுந்து அங்கிருந்த வாழை மரங்களை ஒடித்து சாப்பிட்டு சேதப்படுத்தியது.



தொடர்ந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்தியது. காட்டு யானை வந்ததை அறிந்த சின்னையன் வனத்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டினர். இதில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒற்றை காட்டு யானை வால்பாறை நகருக்குள் புகுந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும், அங்கிருந்து அகன்ற காட்டு யானை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் வால்பாறை நகருக்குள் வரலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...