கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கு முடிந்த நிலையில் பேருந்துகள் சில்லறை வணிக வியாபாரம் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்புகிறது.
கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கு முடிந்த நிலையில் பேருந்துகள் சில்லறை வணிக வியாபாரம் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்புகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் நேற்று ஒரு நாள் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மத்திய அரசு கேட்டு கொண்டது.மக்கள் வீட்டிலேயே இருந்து தங்கள் ஆதரவை அளித்தனர்.
தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், ஆட்டோ, கால் டாக்சி என பல்வேறு தரப்பினரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கினர். இன்று காலை வரை தொடர்ந்த சுய ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர் சில்லறை வணிக வியாபாரம், காய் கனிகள், 76 சதவீத மாநகர மற்றும் வெளியூர் பேருந்துகள் போக்குவரத்து இயங்கி வருகிறது.
தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு செல்லும் பேருந்துகள் சொற்ப அளவில் இயக்கப்படுகிறது. இதில் குறைவான பயணிகளே பயணித்து வருகின்றனர். அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போதுமான அளவு முக கவசம், கிருமி நாசனிகள் வழங்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.