கொரோனா எதிரொலி: மேட்டுப்பாளையம் அருகே வீடுகளில் வேப்பிலை கட்டியும் மஞ்சள் தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட கிராம மக்கள்!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டியும் வாசலில் மஞ்சளை தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டியும் வாசலில் மஞ்சளை தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

நாடு முழுவதும் கொரானோ வைரஸ் காரணமாக மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு கிராமங்களிலும் முழு ஒத்துழைப்பு அளித்து மக்கள் வீடுகளிலேயே இருந்தனர். 



இந்த நிலையில், கொரானோ அச்சம் காரணமாக சில கிராமங்களில் தங்களையும் குடும்பத்தையும் தற்காத்துக் கொள்ளும் விதமாக பண்டைய கால முறைப்படி வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டி மஞ்சளை தெளித்து வருகின்றனர். 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் ஏராளமானோர் இன்று மாலை தங்களது வீடுகளுக்கு வேப்பிலை தோரணம் கட்டும் பணியினை மேற்கொண்டனர். மேலும், சாமி படங்களுக்கு முன்பு வேப்பிலை வைத்து வழிபாடும் நடத்தினர். 

இவ்வாறு செய்வதால் வேப்பிலை மற்றும் மஞ்சள் கிருமினாசி என்பதால் வைரஸ் தொற்று ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ள இந்த கிராம மக்கள், இத்துடன் அரசு அறிவித்துள்ள கொரானோவுக்கு எதிரான அனைத்து அறிவுரைகளையும் கடைபிடித்து வருவதாக தெரிவித்தனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...