கோவையில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி..!

கோவை: ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பு, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பு, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கோவையைச் சேர்ந்த பெண் ஸ்பெயின் நாட்டிற்கு  சென்றுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெளிநாட்டவர் வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பெங்களூர் வழியாக வந்த கோவை சேர்ந்த பெண்ணுக்கு விமான நிலையத்தில் எந்த அறிகுறிகளும் அல்லாததால் கோவைக்கு அனுப்பப்படுகிறார். 

மேலும் அவரை வீட்டில் இருந்தபடியே தனிமையில் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த பெண் தனது வீட்டில் வழக்கம் போல இருந்துள்ளார்.

பின்னர் சில நாட்களுக்குப் பிறகு

கோவையைச் சேர்ந்த பெண்ணின் நண்பருக்கு ஸ்பெயினில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் வெளிநாட்டு சென்று வந்த தகவல்களை தெரிவித்ததையடுத்து அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சில காரணங்களால் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 19ம் தேதி அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது.

பின்னர் அவருடன் எடுத்த நபர்களுக்கு பரிசோதனை முடிவு வந்த நிலையில் அவருடைய பரிசோதனை முடிவுகள் மட்டும் நேற்று இரவு வரை வரவில்லை.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

இப்படியிருக்க கோவையில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பேசியதில் கோவையைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தார் அவருக்கு இன்று வரை எந்த அறிகுறியும் இல்லை எனவும் அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவ குறிப்பில் அவருக்கு கடந்த 9 நாட்களாக காய்ச்சல் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது, ஏன்?, என கேள்வி எழுப்பியுள்ளனர். 



தற்போது, அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் போக்குவரத்தில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...