கோவை: வால்பாறையில் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த சுய ஊரடங்கை முன்னிட்டு வால்பாறையிலுள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கோவை: வால்பாறையில் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த சுய ஊரடங்கை முன்னிட்டு வால்பாறையிலுள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் மூடப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆட்டோக்கள், ஆம்னிவேன்கள் மற்றும் லாரிகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக நகரின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சி சிறப்பு தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றுதல் மற்றும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் காெராேனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து உதகை, குன்னூர், காேத்தகிரி பாேன்ற பகுதிகளில் காலை 7 மணிக்கு முன்பாக தினசரி நாளிதழ், பால், நடை பயிற்சி உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு பெரும்பாலானவர்கள் வீடு திரும்பினர்.

இதன் காரணமாக பேருந்து நிலையம் கார், ஆட்டாே ஸ்டேண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சாேடி காணப்படுகிறது.


ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் மூடப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆட்டோக்கள், ஆம்னிவேன்கள் மற்றும் லாரிகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக நகரின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சி சிறப்பு தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றுதல் மற்றும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் காெராேனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து உதகை, குன்னூர், காேத்தகிரி பாேன்ற பகுதிகளில் காலை 7 மணிக்கு முன்பாக தினசரி நாளிதழ், பால், நடை பயிற்சி உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு பெரும்பாலானவர்கள் வீடு திரும்பினர்.

இதன் காரணமாக பேருந்து நிலையம் கார், ஆட்டாே ஸ்டேண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சாேடி காணப்படுகிறது.
