திருப்பூர்: கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொண்டுள்ளதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூர்: கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொண்டுள்ளதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் அனைத்து பனியன் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், வாகன போக்குவரத்துமின்மையால் நகரின் முக்கிய சாலைகளான புஷ்பா ஜங்சன், குமரன் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மேலும், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்பட்டது. வணிக பகுதிகளான காதர்பேட்டை, நெசவாளர் காலனி பகுதிகளும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. சிட்கோ பகுதிகளிலும் அனைத்து பனியன் நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தது. இந்த சுய ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் அனைத்து பனியன் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், வாகன போக்குவரத்துமின்மையால் நகரின் முக்கிய சாலைகளான புஷ்பா ஜங்சன், குமரன் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மேலும், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்பட்டது. வணிக பகுதிகளான காதர்பேட்டை, நெசவாளர் காலனி பகுதிகளும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. சிட்கோ பகுதிகளிலும் அனைத்து பனியன் நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தது. இந்த சுய ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது.