திருப்பூர் அருகே மது போதையில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் வீரசிவக்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த பழைய கட்டிடத்தின் பின்புறம் தங்கியிருந்து ஊட்டி பகுதியைச் சேர்ந்த விக்கி, மன்சூர், பாபு ஆகிய 3 பேர் பராமரிப்பு வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு மது அருந்தும் பொழுது 3 பேருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மன்சூர் மற்றும் பாபு ஆகியோர் விக்கியை கழுத்து அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் தகவல் கொடுக்க தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உடன் தங்கியிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஹன்டர் ஆகியோர் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...