கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அட்டகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் நகராட்சி கொரானா தடுப்பு சிறப்பு குழுவினரும் வனத்துறையினரும் இணைந்து அங்கு வரும் இரு சக்கர வாகனங்கள், கார், லாரி மற்றும் பேருந்துகள் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அட்டகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் நகராட்சி கொரானா தடுப்பு சிறப்பு குழுவினரும் வனத்துறையினரும் இணைந்து அங்கு வரும் இரு சக்கர வாகனங்கள், கார், லாரி மற்றும் பேருந்துகள் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வாகனங்களில் வருபவர்களிடம் கை கழுவுதலின் அவசியம் குறித்து விளக்கிக் கூறினர். கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

இதே போல், வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு கணேஷ் தலைமையில் நோய் தடுப்பு சிறப்பு குழுவினர் வால்பாறை நகரம் தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், வாகனங்களில் வருபவர்களிடம் கை கழுவுதலின் அவசியம் குறித்து விளக்கிக் கூறினர். கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

இதே போல், வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு கணேஷ் தலைமையில் நோய் தடுப்பு சிறப்பு குழுவினர் வால்பாறை நகரம் தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.