கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக இருந்தவர் முருகையன் மற்றும் அதே வங்கியில் மனோகரன் என்பவர் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த வங்கியில் பெள்ளாதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடன் பெறுவது மற்றும் சேமிப்பு கணக்கு நகைக்கடன் போன்றவை வைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த வங்கியில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகப் பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
அடகு வைக்கப்பட்ட நகை மற்றும் சேமிப்பு டெபாசிட் ஆகியவற்றில் முறைகேட்டில் சங்கத்தின் தலைவர் முருகையன் மற்றும் செயலாளர் மனோகரன் ஆகியோர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை கூட்டுறவு சங்கத்தின் தனிக்கை குழு ஆய்வு நடத்தி விசாரணை நடத்திவந்தது.
இதையடுத்து, விசாரணையில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டதால் தற்போது சங்கத்தின் தலைவர் முருகையன், செயலாளர் மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுறவுத்துறை சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக இருந்தவர் முருகையன் மற்றும் அதே வங்கியில் மனோகரன் என்பவர் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த வங்கியில் பெள்ளாதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடன் பெறுவது மற்றும் சேமிப்பு கணக்கு நகைக்கடன் போன்றவை வைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த வங்கியில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகப் பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
அடகு வைக்கப்பட்ட நகை மற்றும் சேமிப்பு டெபாசிட் ஆகியவற்றில் முறைகேட்டில் சங்கத்தின் தலைவர் முருகையன் மற்றும் செயலாளர் மனோகரன் ஆகியோர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை கூட்டுறவு சங்கத்தின் தனிக்கை குழு ஆய்வு நடத்தி விசாரணை நடத்திவந்தது.
இதையடுத்து, விசாரணையில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டதால் தற்போது சங்கத்தின் தலைவர் முருகையன், செயலாளர் மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுறவுத்துறை சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.