தமிழகத்தில் கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்களை வெளியிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அப்புள்ளி விவரத்தின்படி 21.03.2020 ஆம் தேதியான இன்றுவரை, தமிழ்நாட்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 2,01,672. அதில் தொடர் கண்காணிப்பில் உள்ளவர்கள் 8950 பேர். தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களில், சோதனைக்கு தரப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 412. அதில், 339 மாதிரிகள் கொரோனா நோய்தொற்று இல்லை(நெகட்டிவ்) என்று உறுதி செய்யப்பட்டவை. 3 மாதிரிகள் மட்டும் நோய் தொற்று இருப்பது(பாசிட்டிவ்) உறுதி செய்யப்பட்டது, அதிலும் ஒருவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தனிமைப்படுத்துதல் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை - 1120. பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் டெல்லியை சேர்ந்தவர், அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், 70 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது(under process). இவ்வாறு, அப்புள்ளி விவரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...