திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் சட்டையை கழற்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் சட்டையை கழற்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுவதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. அதுவரை தற்காலிகமாக வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தேவையான வசதிகள் இல்லாத காரணத்தால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகு மார்க்கெட்டை இடிக்க வேண்டும் எனவும் அதேபோல் புதிதாக கட்டப்படும் இடத்தில் தங்களுக்கான கடைகளை ஒதுக்கீடு செய்யும் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆனால், எந்தவித உத்தரவாதமும் அளிக்காமல் இன்று காலை திடீரென மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் கடைகளை இடிக்க வந்ததை கண்டித்து மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் திமுக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சட்டையை கழற்றி அதிகாரிகளை மார்க்கெட்டில் நுழைய விடாமல் மார்க்கெட் நுழைவுவாயிலில் அமர்ந்து அரைநிர்வாண தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுவதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. அதுவரை தற்காலிகமாக வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தேவையான வசதிகள் இல்லாத காரணத்தால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகு மார்க்கெட்டை இடிக்க வேண்டும் எனவும் அதேபோல் புதிதாக கட்டப்படும் இடத்தில் தங்களுக்கான கடைகளை ஒதுக்கீடு செய்யும் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆனால், எந்தவித உத்தரவாதமும் அளிக்காமல் இன்று காலை திடீரென மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் கடைகளை இடிக்க வந்ததை கண்டித்து மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் திமுக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சட்டையை கழற்றி அதிகாரிகளை மார்க்கெட்டில் நுழைய விடாமல் மார்க்கெட் நுழைவுவாயிலில் அமர்ந்து அரைநிர்வாண தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.