திருப்பூரில் வெளிநாட்டிலிருந்து வந்த 19 பேர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர் - ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தகவல்

திருப்பூர்: திருப்பருக்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பருக்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மத்திய அரசு அறிவித்துள்ள படி இத்தாலி, சீனா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்தும் திரும்பிய 19 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை சோதனை செய்த போது கொரோனா வைரஸ்சுக்கான அறிகுறிஇல்லை என்றாலும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக திருப்பூருக்கு வெளிமாநிலங்களில் இருந்து பணிக்காக அழைத்து வரும் வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்துவது குறித்த பின்னலாடை துறையினருடன் ஆலோசித்து வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் முக கவசம், கையுறை தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உற்பத்தி செய்வது குறித்து ஆலோசனை செய்து வருவதாக ஆட்சியர் கூறினார். 

திருப்பூர் மாவட்டத்தைப்பொறுத்தவரை கொரோனா அறிகுறியுடன் எந்த ஒரு நபரும் இதுவரை இல்லை எனவும் அப்படி கொரோனா வைரஸ் பாதிப்போடு வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்தார்.

அதே போல் கொரோனா வைரஸ் குறித்த தவறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...