வார்டுக்கு 8 பேர்‌ வீதம்‌ 800 பணியாளர்கள்‌ வீடூ வீடாகச்‌ சென்று மக்களிடையே விழிப்புணர்வு - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ் முன்னேற்பாடு பணிகளை பற்றி விளக்கிய மாநகராட்சி ஆணையாளர்‌ கூறியதாவது:-

- சுகாதார அலுவலா்கள்‌, சுகாதாரப்‌ பணியாளர்களால்‌ மாநகராட்சியின்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ நாள்தோறும்‌ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



- மாநகராட்சியில்‌ மக்கள்‌ அதிகம்‌ கூடும் இடங்களான இரயில்‌ நிலையங்கள்‌, அனைத்து பேருந்து நிலையங்கள்‌ கணபதி, துடியலூர், சிங்காநல்லூர், உக்கடம்‌ பேருந்து நிலையங்கள்‌, மற்றும்‌ பேருந்து நிறுத்தங்களின்‌ நிழற்குடைகள்‌, மருத்துவமனைகள்‌, ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகளையும்‌, விழிப்புண்வு துண்டு பிரசுரங்கள்‌ விநியோகிக்கும்‌ பணிகளையும்‌ சுகாதாரப்‌ பணியாளா்கள்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌.



- மேலும், மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ கையுறை மற்றும்‌ பாதுகாப்பு உடைகவசமணிந்து மாநகராட்சியின்‌ அனைத்து மண்டலங்களின்‌ 100 வார்டுகளிலும், மருந்து தெளிக்கும் இயந்திரங்களை கொண்டு சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

- மற்றும்‌ 5 பேட்டரி வாகனங்கள்‌ மூலமாக வார்டுக்கு 8 பேர்‌ வீதம்‌ 800 பணியாளர்கள்‌ வீடூ வீடாகச்‌ சென்று துண்டு பிரசுரங்கள்‌ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பணிகளையும்‌, பிளீச்சிங்‌ பவுட்‌ா தெளித்து தூய்மைப்‌ பணிகளையும்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌.

- மாநகராட்சியின்‌ அனைத்து மண்டல அலுவலகங்களிலும்‌ பொதுமக்கள்‌ கைகளை கழுவுதல்‌ மற்றும்‌ மருத்துவ பரிசோதனைகள்‌ மருத்துவ குழுவினாரால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- மாநகராட்சியிலுள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணியாற்றும்‌ பணியாளா்கள்‌, செவிலியர்களின்‌ மருத்துவக் குழுவினர்‌ சம்மந்தப்பட்ட மண்டலங்களில்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ தனிநபர்‌ சுகாதாரத்தை பேணும்‌ வகையில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்திட கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினிகள்‌ கொண்டு கழுவி தூய்மையாக பராமரிக்க வலியுறுத்தி செயல்முறை விளக்கம்‌ பணிகளும்‌ நடைபெற்று வருகிறது.

- பொதுமக்கள்‌, யாருக்காவது காய்ச்சல்‌, இருமல்‌, சளி போன்றவை இருந்தால்‌ அரசு மருத்துவமனைகள்‌, ஆரம்ப சுகாதார மையங்களில்‌ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்‌. 

- பொதுமக்கள்‌ சுயமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பதை தவிர்த்து உரிய மருத்துவரின்‌ ஆலோசனை பெற்ற பின்னரே மருந்து, மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும்‌.

- கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ் நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மருத்துவர்கள்‌, செவிலியா்கள்‌, மாநகராட்சி அலுவலா்கள்‌, தூய்மைப்‌ பணியாளாகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளாா்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ அவாகள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...