கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவதாக ஹீலர் பாஸ்கர் கோவையில் கைது!

கோவை: கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பி வீடியோ வெளியிட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.


கோவை: கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பி வீடியோ வெளியிட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.

மருத்துவத் துறையை நம்பாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம் என்ற பரபரப்பான கருத்தை வெளியிட்டு கோவையில் கைது செய்யப்பட்டவர் ஹீலர் பாஸ்கர். இவர் ஆங்கில மருத்துவங்கள் வணிக ரீதியானது என்றும் அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மருத்துவ சிகிச்சை உள்ளது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார்.



இந்நிலையில், இவர் கொரோனா வைரஸ் குறித்தும் அதன் மருத்துவங்கள் குறித்தும் தொடர்ச்சியாக தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதனிடையே, செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல் பரப்பும் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பியதாக குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்த அவர்கள் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தற்போது கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பியதாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 153 A, 504, 505(i) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிகண்ட ராஜா, ஹீலர் பாஸ்கரை வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...