பொள்ளாச்சி: பக்தர்களின் உயிர் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோரிக்கை மனுவை அளித்தார்.
பொள்ளாச்சி: பக்தர்களின் உயிர் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோரிக்கை மனுவை அளித்தார்.
பொள்ளாச்சியிலிருந்து உடுமலை, மடத்துக்குளம் நகரங்கள் வழியாக புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையை அமைக்கும் போது பழனி முருக பக்தர்கள் பல்வேறு பண்டிகை தினங்களில் பழனியை நோக்கி லட்சக்கணக்கானோர் நடந்து செல்பவர்கள் பயனடைவார்கள்.
இந்த நிலையில், பக்தர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்து தர வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோரிக்கை மனுவை அளித்தார்.
மேலும், திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பழனி வரையிலான நான்கு வழிப்பாதை அருகிலும் நடைபாதை அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்களும் உடனிருந்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
பொள்ளாச்சியிலிருந்து உடுமலை, மடத்துக்குளம் நகரங்கள் வழியாக புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையை அமைக்கும் போது பழனி முருக பக்தர்கள் பல்வேறு பண்டிகை தினங்களில் பழனியை நோக்கி லட்சக்கணக்கானோர் நடந்து செல்பவர்கள் பயனடைவார்கள்.
இந்த நிலையில், பக்தர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்து தர வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோரிக்கை மனுவை அளித்தார்.
மேலும், திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பழனி வரையிலான நான்கு வழிப்பாதை அருகிலும் நடைபாதை அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்களும் உடனிருந்து கோரிக்கை மனுவை வழங்கினார்.