கோவை: கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு பதாகைகள் வைக்கும் பணிகளையும், கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகளையும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வருவதை உதவி ஆணையர்கள் பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு பதாகைகள் வைக்கும் பணிகளையும், கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகளையும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வருவதை உதவி ஆணையர்கள் பார்வையிட்டார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப் பணி நடவடிக்கையாக கைகளை கழுவுதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விழிப்புணாவு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணிகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு பதாகைகள் வைக்கும் பணிகளையும், கிரிமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகளையும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வருவதை உதவி ஆணையர்கள் பார்வையிட்டார்.
