கொரோனோ பரவும்‌ சூழலில் தினக்கூலித்‌ தொழிலாளர்களுக்கு உணவளிப்பது சமூகத்தின்‌ பொறுப்பு -‌ சத்குரு வலியுறுத்தல்‌

கோவை: கொரோனா வைரஸ்‌ அச்சுறுத்தலால்‌ வேலை இழந்து தவிக்கும்‌ தினக்‌ கூலித்‌ தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது நம்‌ சமூகத்தின்‌ பொறுப்பு என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்துள்ளார்‌.

கோவை: கொரோனா வைரஸ்‌ அச்சுறுத்தலால்‌ வேலை இழந்து தவிக்கும்‌ தினக்‌ கூலித்‌ தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது நம்‌ சமூகத்தின்‌ பொறுப்பு என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்துள்ளார்‌.

கொரோனா வைரஸ்‌ தொற்று பரவி வரும்‌ தழலால்‌ உலகம்‌ முழுவதும்‌ பொருளாதாரம்‌ பெரிதும்‌ பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. விமான போக்குவரத்து, பயணம்‌ மற்றும்‌ சுற்றுலா சார்ந்த பெரும்‌ தொழில்கள்‌ அதிகம்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்‌ அதிகம்‌ கண்டுகொள்ளப்படாமல்‌ இருக்கும்‌ ஒரு முக்கிய பிரிவினரான தினக்‌ கூலித்‌ தொழிலாளர்கள்‌ மீது உடனடி கவனம்‌ செலுத்த வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து சத்குரு தனது ட்விட்டர்‌ பதிவு மூலம்‌ வலியுறுத்தி உள்ளார்‌. அதில்‌ பல நாட்களாக தொடர்ந்து வேலை இழந்து தவிக்கும்‌ கூலித்‌ தொழிலாளர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை தினமும்‌ வழங்க வேண்டும்‌ என தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ இன்று (மார்ச்‌ 19) வெளியிட்டுள்ள ட்விட்டர்‌ பதிவில்‌, “தினக்‌ கூலி தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்படுவது, கொரோனா வைரஸ்‌ பாதிப்புகளில்‌ மிக மோசமான ஒன்றாகும்‌. உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும்‌, இறப்புகளுக்கும்‌ வழிவகுக்கும்‌. அவர்களுக்கு தினசரி உணவையேனும்‌ வழங்குவது இந்த சமூகத்தின்‌ பொறுப்பு. நாம்‌ அனைவரும்‌ ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ்‌ பரவுவதை முறியடிப்போம்‌.” என்று தெரிவித்துள்ளார்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...